Thursday, 20 October 2016

உழவர் பாதுகாப்பு திட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டம் அவசாணை பலவகை எண் 265 வருவாய் (நிலசீர்த்திமற்றும்1(2) துறை நாள்10.9.2011ன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் மூலம் நிலமற்ற விவசாயகூலி வேலை செய்பவர்களுக்காகவும், குத்தகை முறையில் விவசாயம் செய்யும் விவசாயகளுக்காகவும் இப்பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செப்டம்பர் 2011 10ம் நாள் முதல் இத்திட்டம் செயலுக்கு வருகிறது இத்திட்டத்தின் முலம் பலவகையான நலத்திட்ட நிதி உதவிகள் பதிவு பெற்ற உழவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதிகள்

 

சொந்த 18 மதல் 65 வயது வரையுள்ள 

 

பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத  உழவர்கள் நஞ்சை நிலமாக இருந்தால் 2.50 ஏக்கருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்கு மிகாலும் குத்தகை அடிப்படையில் சொந்த விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்திட்டம் மூலம் பயன்பெற தகுதியுடையவராகிறார்கள். எவ்வித வேறு வருமானமும் இல்லாத பதிவுப்பெற்ற விவசாயகளின் கீழ்க்கண்ட உறவினர்கள் இத்திட்டத்திற்காக உழவர்களை சார்ந்தவராக கருதப்படுவார்கள்
அ) மனைவி(அ) கணவன்
ஆ) குழுந்தைகள்
இ) குழந்தைகள் மற்றும் இறந்த விட்ட மகனின் மனைவி
ஈ) பெற்றோர்கள்

இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற கட்டணம் எதுவும் கிடையாது

 

கீழ்கண்ட வேலைகள் வேளாண்மை தொடர்புடைய பணிகளாக கருதி இத்திட்டத்தின் கீழ் உழவராக பதிவு பெற தகுதியாக எடுத்து கொள்ளலாம்.

தோட்ட வேலைகள்பட்டுப்ப்பூச்சி வளர்த்தல்பயிர்கள் பயிரிடல்,புல் வளர்த்தல்நிலம் முழுவதையுமோ அல்லது பகுதி நிலத்தையோ மேய்ச்சல் புல்வெளியாக பயன்படுத்துதல்இயற்கை உரங்களை தரும் பயிர்களை பயிரிடல்பால்பண்னை நடத்துதல்கோழியினங்கள் வளர்த்தல்ஆடுமாடு வளர்த்தல்மரங்கள் வளர்த்தல்உள்நாட்டு மீன் வளர்த்தல்

இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

உறுப்பினர்கள் திருமணம்உறுப்பினர்களின் குழந்தைகளின் திருமணம்வயது முதிர்ந்தோர் ஒய்வூதியம் திட்டம்இயற்கையாக மரணமடைந்தோருக்கு இறுதிச் சடங்கு செலவு தொகையுடன் நிதிஉதவிகள்.

உறுப்பினர்கள் திருமணம்

      பதிவு பெற்ற ஆண் உழவருக்கு ரூ8000 -மும் பெண் உறுப்பினருக்கு ரூ10000-மும் திருமண நிதியாக வழங்கப்படுகிறது

உறுப்பினர்கள் குழந்தைகள் திருமணம்

 பதிவுபெற்ற உறுப்பினா்களின் ஆண் குழுந்தைகளுக்கு ரூ8000 மும் பெண் குழுந்தைகளுக்கு ரூ10000 மும் திருமண நிதிஉதவியாக வழங்கப்படுகிறது

வயது முதிர்ந்தோர் ஒய்வூதியம்

 பதிவு பெற்ற  உறுப்பினர்களுக்கு தங்களது 60 வயது முதல் இயற்கை எய்தும் வரை ரூ1000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது

இயற்கை மரண நிதியுதவி திட்டம்
 இயற்கை மரணமடையும் உறுப்பினர் களுக்கு ரூ12500 நிதியுதவி (நிதியுதவி ரூ10000-மும்+ரூ2500 இறுதி சடங்குசெலவு உட்பட ) வழங்கப்படுகிறது

விபத்தினால் மரணம்
 விபத்தினால் மரணமடையும் பதிவுப் பெற்ற உழவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ1,02,500 (நிதியுதவி ரூ100000 + இறுதிச் சடங்கு செலவு ரூ2500) வழங்கப்படுகிறது. 
நிதி ஒதுக்கீடு
மேற்கண்டவாறு பல்வேறு நிதியுதவி திட்டங்களுக்கு சென்னை நிலச்சீர்த்திருத்த ஆணையர் மூலம் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

 
கோ.ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்

Wednesday, 19 October 2016

மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்கலாம்.

மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்கலாம்.

இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Engineering books download

கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://bookboon.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்

அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

கோ.ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்

ஏழைப்பெண்களின் அரசு நிதியுதவித் திட்டம்

ஏழைப்பெண்களின் அரசு நிதியுதவித் திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம்.

கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.

வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்

திட்டம் 1-

மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

திட்டம் 2

பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம்

72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். 5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

தேவையான சான்றுகள்

பள்ளிமாற்றுச் சான்று நகல் திருமண அழைப்பிதழ் வருமானச் சான்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் –பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று –

யாரை அணுகுவது

மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம். தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்

ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள்

திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள்

ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2)விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தேவையான சான்றுகள்

பள்ளிமாற்றுச் சான்று நகல் திருமண அழைப்பிதழ் வருமானச் சான்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்

தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம். வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள்

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும். 2)வருமான வரம்பு இல்லை.மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்

சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

குறிப்பு

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது மேற்கூறிய மூன்று திட்டங்களுக்கும் பொருந்தும்.

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்

திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.வருமான வரம்பு இல்லை.மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்

விதவைச் சான்று மறுமணப் பத்திரிகை மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று திருமணப் புகைப்படம் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்

பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.திட்டம்2-பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.வருமான வரம்பு இல்லை விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்

திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று மணப்பெண்ணின் வயதுச் சான்று பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

குறிப்பு

அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க

சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

http://www.chennaicorporation.gov.in/moovaloor/appl_form_step1.jsp

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு இத்திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

தகுதிகள்

கல்வித்தகுதி இல்லை.20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.ஆண்டு வருமானம் சூ24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

ஆதரவற்றோர் / கைவிடப்பட்டவர் / விதவை / மாற்றுத்திறனுடையோர் என்பதற்கான சான்றிதழ்.குடும்ப வருமானச் சான்றிதழ்வயதுச் சான்றிதழ்விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.

கோ.ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்