Tuesday, 29 November 2016

ஆண் பிள்ளைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம்: பத்து முக்கிய அம்சங்கள்

ஆண் பிள்ளைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம்: பத்து முக்கிய அம்சங்கள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து,ஆண் குழந்தைகளின் எதிர்காலத்தைவளமாக்குவதற்காக பொன்மகன் சேமிப்புதிட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தபால் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி(2015) மாதம் செல்வமகள் சேமிப்பு திட்டம்தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்குதமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும் வகையில்சுமார் 10,60,000 கணக்குகள்தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும்சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்என்ற பல்வேறு தரப்பில் இருந்து தபால்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன. 

இதனை ஏற்று, குறைந்த மற்றும் நடுத்தரவருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்புபழக்கத்தை உருவாக்கும் வகையில்‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்றதிட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது.


சென்னை வட்ட தபால் துறை தலைவர்மெர்வின் அலெக்சாண்டர் இந்தத் திட்டத்தின்பத்து முக்கிய அம்சங்களை குறிப்பிட்டார்.

1. பத்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்பாதுகாவலர் உதவியோடும், 10 வயதுக்குமேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவேவந்து பொன்மகன் பொது வைப்பு நிதிதிட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 

2. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கவயது வரம்பு கிடையாது. 

3. குறைந்தபட்சம் ரூ.100 பணம் செலுத்திகணக்கை தொடங்கலாம். 

4. கணக்கு தொடங்கியதில் இருந்து 15ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

5. குறைந்தபட்ச முதலீடு ரூ.500.

6. அதிகபட்ச முதலீடு நிதி ஆண்டில் ரூ.1.5லட்சம் வரை

7. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7% வட்டிநடப்பு நிதி ஆண்டில் (2015-16)வழங்கப்படும். 

8. ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. 

9. கணக்கு தொடங்கிய உடன் 3-வதுஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது.கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வதுஆண்டில் இருந்து 50% தொகையைபெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பிசெலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள்முடிந்த உடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். 

10. இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும்தொகைக்கு வருமான 80 சி பிரிவில் வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதுடன்,வட்டிக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வைப்பு நிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல்அலுவலகங்களையும் அணுகலாம். சென்னைவட்டத்தில் உள்ள அனைத்து தபால்அலுவலகங்களிலும் கணக்குகள் தொடங்கப்படுகிறது.

கோ.ஜெயமணிகண்டன்.
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்.

No comments:

Post a Comment